குஜராத் கலவர ஆவணங்கள் பாதுகாப்பாக உள்ளன: குஜராத் அரசு பல்டி
Page 1 of 1
குஜராத் கலவர ஆவணங்கள் பாதுகாப்பாக உள்ளன: குஜராத் அரசு பல்டி
குஜராத் கலவர ஆவணங்கள் எதுவும் அழிக்கப்படவில்லை என்று அம்மாநில உள்துறை அதிகாரி கூறியுள்ளார்.
குஜராத் கலவரம் தொடர்பான ஆவணங்கள் அழிக்கப்பட்டுவிட்டன என அம்மாநில அரசு வழக்கறிஞர் சில நாள்களுக்கு முன் கூறியிருந்த நிலையில், இப்போது உள்துறை அதிகாரியின் அறிவிப்பால் குஜராத் அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
குஜராத்தில் 2002ஆம் ஆண்டு நடத்தப்பட்ட கலவரம் தொடர்பாக நானாவதி கமிஷன் அமைக்கப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. குஜராத் அரசு சார்பில் அரசு வழக்கறிஞரான எஸ்.பி. வகீல் ஆஜராகி வாதாடி வருகிறார். உச்சநீதிமன்றத்திலும் இதுதொடர்பான வழக்கு விசாரணையில் உள்ளது.
இந்நிலையில் கடந்த மாதம் செய்தியாளர்களிடம் பேசிய எஸ்.பி. வகீல், குஜராத் கலவரம் தொடர்பான தொலைபேசி உரையாடல் பதிவுகள், அதிகாரிகள் பணியாற்றிய விவர குறிப்புகள், வாகனங்கள் பயன்பாடு குறித்த பதிவுப்புத்தகம் உள்பட முக்கிய ஆணவங்கள் அழிக்கப்பட்டுவிட்டதாக கூறினார். அரசு விதிப்படி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் அவர் கூறியிருந்தார்.
இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமையன்று அஹமதாபாத்தில் செய்தியாளர்களிடம் பேசிய குஜராத் மாநில உள்துறை அதிகாரி ஒருவர், குஜராத் கலவரம் தொடர்பான புனலாய்வுத் துறை ஆவணங்கள் எதுவும் அழிக்கப்படவில்லை என்று கூறினார்.
குஜராத் கலவரம் தொடர்பான புனலாய்வுத் துறை ஆவணங்கள் அனைத்தும் பாதுகாப்பாக உள்ளன. சில தாற்காலிக கோப்புகள் மட்டும் அழிக்கப்பட்டுள்ளன. ஆனால் 2002ஆம் ஆண்டு கலவரம் தொடர்பான தகவல் தொடர்பு தொடர்பான ஆவணங்கள் ஏதும் அழிக்கப்படவில்லை. இவை நிரந்தரமாக பாதுகாப்பாக வைக்கப்பட்டிருக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.
இந்நேரம்
குஜராத் கலவரம் தொடர்பான ஆவணங்கள் அழிக்கப்பட்டுவிட்டன என அம்மாநில அரசு வழக்கறிஞர் சில நாள்களுக்கு முன் கூறியிருந்த நிலையில், இப்போது உள்துறை அதிகாரியின் அறிவிப்பால் குஜராத் அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
குஜராத்தில் 2002ஆம் ஆண்டு நடத்தப்பட்ட கலவரம் தொடர்பாக நானாவதி கமிஷன் அமைக்கப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. குஜராத் அரசு சார்பில் அரசு வழக்கறிஞரான எஸ்.பி. வகீல் ஆஜராகி வாதாடி வருகிறார். உச்சநீதிமன்றத்திலும் இதுதொடர்பான வழக்கு விசாரணையில் உள்ளது.
இந்நிலையில் கடந்த மாதம் செய்தியாளர்களிடம் பேசிய எஸ்.பி. வகீல், குஜராத் கலவரம் தொடர்பான தொலைபேசி உரையாடல் பதிவுகள், அதிகாரிகள் பணியாற்றிய விவர குறிப்புகள், வாகனங்கள் பயன்பாடு குறித்த பதிவுப்புத்தகம் உள்பட முக்கிய ஆணவங்கள் அழிக்கப்பட்டுவிட்டதாக கூறினார். அரசு விதிப்படி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் அவர் கூறியிருந்தார்.
இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமையன்று அஹமதாபாத்தில் செய்தியாளர்களிடம் பேசிய குஜராத் மாநில உள்துறை அதிகாரி ஒருவர், குஜராத் கலவரம் தொடர்பான புனலாய்வுத் துறை ஆவணங்கள் எதுவும் அழிக்கப்படவில்லை என்று கூறினார்.
குஜராத் கலவரம் தொடர்பான புனலாய்வுத் துறை ஆவணங்கள் அனைத்தும் பாதுகாப்பாக உள்ளன. சில தாற்காலிக கோப்புகள் மட்டும் அழிக்கப்பட்டுள்ளன. ஆனால் 2002ஆம் ஆண்டு கலவரம் தொடர்பான தகவல் தொடர்பு தொடர்பான ஆவணங்கள் ஏதும் அழிக்கப்படவில்லை. இவை நிரந்தரமாக பாதுகாப்பாக வைக்கப்பட்டிருக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.
இந்நேரம்
Similar topics
» குஜராத் கலவர ஆவணங்கள் அழிப்பு: காங்கிரஸ், பாதிக்கப்பட்டோர் கண்டனம்!
» குஜராத் கலவர முக்கிய சாட்சி சையது வெட்டி கொலை
» இனப்படுகொலை ஆவணங்கள் அழிப்பு:குஜராத் போலீசிடம் விளக்கம் கேட்கும் நானாவதி கமிஷன்
» மத்திய அரசின் மத கலவர தடுப்பு மசோதாவுக்கு தமிழகம் மற்றும் குஜராத் உள்ளிட்ட மாநில முதல்வர்கள் எதிர்ப்பு
» இஷ்ரத் ஜஹான் போலி என்கவுண்டரில் சிக்கி உழலும் குஜராத் அரசு!
» குஜராத் கலவர முக்கிய சாட்சி சையது வெட்டி கொலை
» இனப்படுகொலை ஆவணங்கள் அழிப்பு:குஜராத் போலீசிடம் விளக்கம் கேட்கும் நானாவதி கமிஷன்
» மத்திய அரசின் மத கலவர தடுப்பு மசோதாவுக்கு தமிழகம் மற்றும் குஜராத் உள்ளிட்ட மாநில முதல்வர்கள் எதிர்ப்பு
» இஷ்ரத் ஜஹான் போலி என்கவுண்டரில் சிக்கி உழலும் குஜராத் அரசு!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum