தாருல் அர்கம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

காவலில் இளைஞர் மரணம் - காஷ்மீரில் பதட்டம்!

Go down

காவலில் இளைஞர் மரணம் - காஷ்மீரில் பதட்டம்!  Empty காவலில் இளைஞர் மரணம் - காஷ்மீரில் பதட்டம்!

Post by முஸ்லிம் Sun Jul 31, 2011 8:23 pm

காவல்துறையின் காவலில் வைக்கப்பட்டிருந்த இளைஞர் மர்மமான முறையில் மரணம் அடைந்ததைத் தொடர்ந்து காஷ்மீரின் வடக்குப் பகுதியில் உள்ள சோபூர் நகரில் பதட்டம் நிலவுகிறது. "தவறிழைத்தோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்" என்று காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா கூறியுள்ளார்.



சோபூர் நகரின் கிரன்க்‌ஷிவன் பகுதியைச் சேர்ந்த அஷ்ரப் என்பவர் கொல்லப்பட்டது தொடர்பாக, சந்தேகத்தின் பேரில் நாஜிம் ராஷித் என்ற 26 வயது இளைஞரைக் காவல்துறையினர் கைது செய்தனர். காவல்துறையின் கட்டுப்பாட்டில் இருந்த இவர், இன்று மரணம் அடைந்துவிட்டதாக தகவல் வெளியானதைத் தொடர்ந்து சோபூர் நகரில் பதட்டமான சூழல் நிலவுகிறது.

சோபூர் நகர் முழுவதும் ஏராளமான மத்திய ரிசர்வ் படையினரும் துணை இராணுவப் படையினரும் குவிக்கப்பட்டுள்ளனர். இந்தத் தகவல் அறிந்ததும் காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா தன்னுடைய டிவிட்டரில், "காவல்துறையின் கட்டுப்பாட்டில் இருந்த ராஷிதின் மரணம் அப்பட்டமான மனித உரிமை மீறல்" என்றும் "மன்னிக்க முடியாதது" என்றும் கூறியுள்ளார்.

இதுபோன்ற நிகழ்வுகள் மீண்டும் நிகழ்வதை அனுமதிக்க முடியாது என்றும் இந்தத் தவறுக்குக் காரணமானவர்கள் மீது கடுமையான தண்டனை உடனடியாக வழங்கப்படும் என்றும் உமர் கூறியுள்ளார்.

இந்நிலையில், சையது அலி, மிர்வாய்ஸ் உமர் பரூக், ஷாகிதுல் இஸ்லாம் உள்ளிட்ட காஷ்மீரி தலைவர்கள் இன்று வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இந்நேரம்
முஸ்லிம்
முஸ்லிம்
FOUNDER

நான் உங்கள் : சகோதரன்
பதிவுகள் பதிவுகள் : 2030
ஸ்கோர் ஸ்கோர் : 10928
Points Points : 42
வயது வயது : 35
எனது தற்போதய மனநிலை : Fine

http://123muslim.com/

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum