தாருல் அர்கம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

போபால் விஷவாயு விபத்தில் பாதிக்கப்பட்டவர்களிடம் சட்டவிரோத மருந்து பரிசோதனை – அதிர்ச்சி தகவல்

Go down

போபால் விஷவாயு விபத்தில் பாதிக்கப்பட்டவர்களிடம் சட்டவிரோத மருந்து பரிசோதனை – அதிர்ச்சி தகவல்   Empty போபால் விஷவாயு விபத்தில் பாதிக்கப்பட்டவர்களிடம் சட்டவிரோத மருந்து பரிசோதனை – அதிர்ச்சி தகவல்

Post by முஸ்லிம் Mon Aug 08, 2011 6:19 pm

போபால்:போபால் விஷவாயு விபத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக அரசு நிறுவிய போபால் மெமோரியல் அண்ட் ரிசர்ச் செண்டர் நோயாளிகளிடம் சட்டவிரோத மருந்துகளை பரிசோதனை நடத்திய அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இங்கு சிகிட்சை பெற்ற விஷவாயு விபத்தில் பாதிப்பிற்குள்ளான 80 சதவீத நோயாளிகளிடமும் அநியாயமாக சட்டவிரோதமான மருந்தை பரிசோதனைச் செய்த விபரங்கள் அடங்கிய அறிக்கை வெளியாகியுள்ளது.

முன்னர் எழுப்பட்ட குற்றச்சாட்டுகளை இந்த அறிக்கை உறுதிச் செய்கிறது. போபாலில் விரிவான வசதிகளுடன் கூடிய மல்டி ஸ்பெஷாலிடி மருத்துவமனையில்தான் இந்த அக்கிரமம் நிகழ்ந்துள்ளது. இங்கு சிகிட்சைக்காக வந்த 279 நோயாளிகளிடம் மருந்து பரிசோதனை நடந்துள்ளது. இதில் 215 பேரும் போபால் விஷவாயு விபத்தில் பாதிக்கப்பட்டவர்கள். மருந்து பரிசோதனையில் 34 பேர் மரணித்ததாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.

கடந்த பிப்ரவரி மாதம் மருத்துவமனை இயக்குநர் பிரிகேடியர் கெ.கெ.மவ்தர் துணை மருத்துவ கட்டுப்பாட்டாளர் டாக்டர்.ராமகிருஷ்ணாவுக்கு எழுதிய கடிதத்தில் மருந்து பரிசோதனையை உறுதிச்செய்யும் விபரங்கள் அடங்கியுள்ளன.

மருத்துவ மனையில் நான்கு பிரிவுகளில் மருந்து பரிசோதனை நடந்துள்ளது. இதயநோய் பிரிவில் அனுமதிக்கப்பட்ட போபால் விஷவாயு விபத்தால் பாதிக்கப்பட்ட 160 நபர்கள் உள்பட 218 நோயாளிகளுக்கும், ஜி.எ அறுவை சிகிட்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட 45 போபால் விஷவாயு விபத்தினால் பாதிக்கப்பட்டவர்கள் உள்பட 49 நோயாளிகளிடமும், நுரையீரல் நோய் பிரிவில் அனுமதிக்கப்பட்ட போபால் விஷவாயு விபத்தால் பாதிக்கப்பட்ட 49 பேர்களிடமும், அனஸ்தீஸியா பிரிவில் 7 பேர்களிடமும் பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது.

மருந்து பரிசோதனை குறித்து கடந்த ஆண்டு அறிக்கைகள் வெளியான பிறகும் மருத்துவமனை அதிகாரிகள் இதனை மறுத்தனர். மருந்து பரிசோதனை குறித்து தகவல் கிடைக்கவில்லை என மருத்துவமனையில் ஹெல்த் சர்வீஸ் இயக்குநர் ஜெனரல் கூறுகிறார். ஆனால், மருந்து பரிசோதனையின் மூலமாக மரணித்தவர்களின் பெயர் விபரங்களை வெளியிட அவர் மறுத்துவிட்டார்.

இந்தியாவில் மருந்து பரிசோதனை துறையில் ஏறத்தாழ 3000 கோடி ரூபாய் வர்த்தகம் நடப்பதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.

போபால் விஷவாயு விபத்தில் பாதிக்கப்பட்டவர்களிடம் சட்டவிரோத மருந்து பரிசோதனை – அதிர்ச்சி தகவல்   Logoto
முஸ்லிம்
முஸ்லிம்
FOUNDER

நான் உங்கள் : சகோதரன்
பதிவுகள் பதிவுகள் : 2030
ஸ்கோர் ஸ்கோர் : 10929
Points Points : 42
வயது வயது : 35
எனது தற்போதய மனநிலை : Fine

http://123muslim.com/

Back to top Go down

Back to top

- Similar topics
» போபால் விஷவாயு விபத்து:27 ஆண்டுகள் நிறைவு
» தொ(ல்)லைகாட்சியால் குழந்தைகளுக்கு இதய நோய் பாதிப்பு-அதிர்ச்சி தகவல்
» தென் ஆப்பிரிக்கா பல இயற்கை பேரழிவுகளால் பாதிக்கப்பட வாய்ப்பு – அதிர்ச்சி தகவல்
» கிழக்கு ஆப்ரிக்காவில் ஏழு லட்சத்திற்கும் மேலானோர் மரணம் அடைய வாய்ப்பு: ஐ.நா அதிர்ச்சி தகவல்
» இஸ்ரேலிய போதைப் மருந்து கடத்தல்காரரை கைது செய்யவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது:கோவா காவல்துறை

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum