தாருல் அர்கம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

சிறுவன் உட்பட 5 பலஸ்தீனர்கள் கைது: ஆக்கிரமிப்புப் படை அராஜகம்!

Go down

சிறுவன் உட்பட 5 பலஸ்தீனர்கள் கைது: ஆக்கிரமிப்புப் படை அராஜகம்!  Empty சிறுவன் உட்பட 5 பலஸ்தீனர்கள் கைது: ஆக்கிரமிப்புப் படை அராஜகம்!

Post by முஸ்லிம் Tue Sep 20, 2011 1:32 pm

"பலஸ்தீனிலுள்ள அல் கலீல் பிரதேசத்தில்
நேற்று(19/09/2011) அதிகாலை 15 வயதுச் சிறுவன் உட்பட ஐந்து பலஸ்தீனர்கள்
இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்" என உள்ளூர்
வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.



பலஸ்தீன் சிறுவன் உட்பட கைது செய்யப்பட்ட
மூவர் அருப் அகதி முகாமில் வைத்துக் கைதுசெய்யப்பட்டுள்ளதாக அத் தகவலில்
குறிப்பிடப்பட்டுள்ளது.

அல் கலீல் நகரில் உள்ள மலிக் துவைஷ்
என்பவரின் வீட்டை உடைத்த ஆக்கிரமிப்புப் படை அங்கிருந்த பணத்தைக்
கொள்ளையடித்ததோடு, அவரை நியாயமான எந்தக் காரணமும் இன்றிக் கைதுசெய்துள்ளது.

இதேவேளை, தஹீரியா எனும் பலஸ்தீன்
கிராமத்தினுள் அத்துமீறிப் பிரவேசித்த இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படை,
அங்கிருந்த அப்பாவிப் பொதுமக்களின் வீடுகளை உடைத்து நொறுக்கியுள்ளது.

மேலும், கடந்த ஞாயிற்றுக் கிழமை ஸல்ஃபித்
நகரில் இடம்பெற்ற திருமண வைபவத்தில் கலந்து கொண்டபின் ஊர் திரும்புவதற்காக
பஸ்ஸில் சென்று கொண்டிருந்த பலஸ்தீன் பொதுமக்கள்மீது இஸ்ரேலிய
ஆக்கிரமிப்புப் படை அடாவடித் தாக்குதல் மேற்கொண்டுள்ளது. இதன் போது
வீசியெறியப்பட்ட கண்ணீர்ப் புகைக் குண்டுகளால் சுமார் 20க்கும் மேற்பட்ட
பலஸ்தீன் பெண்கள் மூச்சுத் திணறலுக்குள்ளாகி அவதிப்பட்டனர்.


இந்நேரம்
முஸ்லிம்
முஸ்லிம்
FOUNDER

நான் உங்கள் : சகோதரன்
பதிவுகள் பதிவுகள் : 2030
ஸ்கோர் ஸ்கோர் : 10929
Points Points : 42
வயது வயது : 35
எனது தற்போதய மனநிலை : Fine

http://123muslim.com/

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum