Assalaamu Alaikum, Guest
Create Account


















Chat

Welcome To IP
இஸ்லாமிய பூங்கா -இது பூக்களின் உலகம் » இஸ்லாம் » இஸ்லாமிய சிந்தனைகள் » இன்றைய சிந்தனை »

சிந்தனைத் துளிகள்!
அன்புள்ள விருந்தினரே ! ஏக இறைவனின் சாந்தியும், சமாதானமும் உங்கள் மீது என்றென்றும் நிலவுவதாக... நீங்கள் தற்போது இந்த இணைய மன்றத்தில் குறைந்த உரிமைகளுடன் விருந்தினராக உள்ளீர்கள்.இந்த இணைய மன்றத்தில் இணைந்து புதிய தலைப்புகளை தொடங்க,மறுமொழியிட,மேலும் பல சிறப்புரிமைகளை பெற இன்றே இணைந்திடுங்கள் இஸ்லாமிய பூங்காவில்.

இணைவதில் ஏதேனும் பிரச்சனையா? எங்களை தொடர்பு கொள்ளவும்.





View previous topic View next topic Go down  Message [Page 1 of 1]

முஸ்லிம்'s Info


FOUNDER
FOUNDER
View user profile http://123muslim.com/

Loading
"உயர்ந்த இலட்சியம் கொண்ட ஒருவன் ஆயிரம் தவறுகள் செய்தால், இலட்சியம் இல்லாமல் வாழ்பவன் ஐம்பதினாயிரம் தவறுகள் செய்வான்" - சுவாமி விவேகானந்தா.
"கோபமாகப் பேசும் போது அறிவு தன் முகத்துக்குத் திரையிட்டுக் கொள்கின்றது" - சீனப் பழமொழி.

"பல்லாண்டு காலமாக முதுமை வளர, எட்டாத தூரத்தில் விண்மீனாக மினுமினுத்து வாழ்வதைக் காட்டிலும், ஒரு கணம் ஊரெங்கிலும் உன்னத ஒளி பாய்ச்சி மறுகணம் மறைந்துவிடும் மின்னலாக வாழவே ஆசைப்படுகிறேன்" - காண்டேகர்.

"காலையில் பத்து மணி வரை எல்லோரிடமும் இனிமையாக நடந்துகொள்ளுங்கள். அதன் பின் நாள் முழுதும் இனிமையாக இருக்கும்." - எல்பர்ட் ஹாவார்ட்.

"பெண்களுக்குப் பலம் குறைவு தான். ஆனால், அவர்களிடம் உள்ள துணிச்சல் ஓர் ஆணுக்கு உள்ளதை விடவும் அதிகம்." - மகாத்மா காந்தி.

"ஆயிரம் நண்பர்கள் இருப்பார்கள்; தருணத்திற்கு ஒருவரும் அகப்பட மாட்டார்கள். ஒரே ஒரு எதிரி இருப்பான். எங்கேயும் எப்போதும் அவன் எதிர்ப்பட்டுக்கொண்டே இருப்பான்." - எமர்ஸன்.

"தனது சகிப்புத் தன்மையால் எவ்விதத் துன்பத்தையும் தவிடுபொடியாக்கி விடலாம். ஆனால், அவசரக்காரன் தனது அத்தனை பாக்கியங்களையும் இழந்து விடுகிறான்." - முஹம்மது நபி.

"அறிவு என்பது நதியைப் போன்றது. அது எவ்வளவுக்கெவ்வளவு ஆழமாக இருக்கின்றதோ, அவ்வளவுக்கவ்வளவு அமைதியாக இருக்கும்." - பேகன்.

இந்நேரம்

கை-யொ-ப்-ப-ம் ____________________



"உன் சகோதரன் அநியாயம் செய்பவனாக இருக்கும் நிலையிலும், அநியாயம் செய்யப்பட்டவனாக இருக்கும் நிலையிலும் உதவி செய்" என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது ஒருவர் "அல்லாஹ்வின் தூதரே! அநியாயம் செய்யப்பட்டவனாக இருக்கும் நிலையில் நான் உதவி செய்வேன், ஆனால் அவன் அநியாயம் செய்யக்கூடியவனாக இருக்கும் போது எப்படி உதவுவது என்று எனக்குக் கூறுங்கள்" என்றார். "அநியாயம் செய்வதிலிருந்து நீ அவனைத் தடுக்க வேண்டும். அதுவே அவனுக்கு நீ செய்யும் உதவி" என நபி (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள்.

அறிவிப்பவர்: அனஸ் (ரலி)
நூல்: புகாரி.



View previous topic View next topic Back to top  Message [Page 1 of 1]

YOU MUST REGISTER TO POST FAST REPLY Register Here

Permissions in this forum:
You cannot reply to topics in this forum