தாருல் அர்கம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

புலால் உணவு உண்ணுவது மனிதனை வன்முறையாளனாகவும் - மூர்க்கமானவனாகவும் மாற்றுமே?

Go down

 புலால் உணவு  							உண்ணுவது மனிதனை வன்முறையாளனாகவும் -  							மூர்க்கமானவனாகவும் மாற்றுமே? Empty புலால் உணவு உண்ணுவது மனிதனை வன்முறையாளனாகவும் - மூர்க்கமானவனாகவும் மாற்றுமே?

Post by முஸ்லிம் Sun Jan 16, 2011 7:43 pm

 புலால் உணவு  							உண்ணுவது மனிதனை வன்முறையாளனாகவும் -  							மூர்க்கமானவனாகவும் மாற்றுமே? Dr.ZakirNaik1


தமிழில் : அபு இஸாரா
கேள்வி


மனிதன் என்ன உண்கிறானோ - அதனுடைய தாக்கம் அவனது
நடவடிக்கைகளில் தென்படும் என்பது அறிவியல் கூற்று.
அப்படி இருக்கும்போது - இஸ்லாம் புலால் உணவு உண்ண
அனுமதியளிப்பது எப்படி?. ஏனெனில் - புலால் உணவு
உண்ணுவது மனிதனை வன்முறையாளனாகவும் -
மூர்க்கமானவனாகவும் மாற்றுமே எப்படி?



பதில்:



1. இஸ்லாமிய மார்க்கம் - தாவர உண்ணிகளான ஆடு மாடு
ஒட்டகம் போன்ற கால்நைடகளை மாத்திரம் மனிதர்கள் உணவாக
உட்கொள்ள அனுமதியளித்துள்ளது.


மனிதன் என்ன உண்கிறானோ - அதனுடைய தாக்கம் அவனது
நடவடிக்கைகளில் தென்படும் என்பதை நான் ஏற்றுக்
கொள்கிறேன். எனவேதான் இஸ்லாமிய மார்க்கம் - மாமிச
உண்ணிகளான சிங்கம் - புலி - சிறுத்தை போன்ற
விலங்கினங்களை மனிதர்கள் உணவாக உட்கொள்வதை தடை
செய்துள்ளது. ஏனெனில் மேற்படி விலங்கினங்கள் மூர்க்க
குணம் கொண்டவை. மேற்படி விலங்கினங்களின் இறைச்சியை
உண்பவர்கள் மூர்க்கக் குணம் கொண்டவர்களாக மாறலாம்.
அதனால்தான் இஸ்லாம் தாவர உண்ணிகளான ஆடு - மாடு -
ஒட்டகம் போன்ற பிரானிகளின் இறைச்சியை மனிதர்கள் உணவாக
உட்கொள்ள அனுமதித்துள்ளது. மேற்படி பிராணிகள் -
அமைதியானதும் - பணிவானதும் ஆகும். இஸ்லாமியர்களான
நாங்கள் - அமைதியான பிராணிகளான - ஆடு - மாடு - ஒட்டகம்
போன்றவைகளை உணவாக உட்கொள்கிறோம். எனவேதான் நாங்கள்
அமைதியை விரும்புகிறவர்களாக - இருக்கின்றோம்.




2. அருள் மறை குர்ஆனும் - நபிகளாரின் பொன்மொழியும் -
கெட்ட உணவு வகைகளை உண்பதை தடை செய்துள்ளது.


'(நபியாகிய) அவர் நன்மையான காரியங்களைச் செய்யுமாறு
ஏவுவார். பாவமான காரியங்களிலிருந்து விலக்குவார்.
தூய்மையான ஆகாரங்களையே அவர்களுக்கு ஆகுமாக்குவார்.
கெட்டவற்றை அவர்களுக்குத் தடுத்துவிடுவார்..'

(அல்-குர்ஆன் அத்தியாயம் 07 - ஸுரத்துல் அஃராப் -
157வது வசனம்)



'மேலும் (நம்) தூதர் உங்களுக்கு எதைக் கொடுக்கின்றாரோ
அதை எடுத்துக்கொள்ளுங்கள். இன்னும் எதைவிட்டும் உங்களை
விலக்குகின்றாரோ அதை விட்டும் விலகிக் கொள்ளுங்கள்.'

(அல்-குர்ஆன் அத்தியாயம் 59 - ஸுரத்துல் ஹஷ்ர் - 7வது
வசனம்)



சில பிராணிகளின் இறைச்சியை மனிதர்கள் உணவாக உட்கொள்ள
அனுமதியளித்திருக்கும் அல்லாஹ் - சில பிராணிகளின்
இறைச்சியை மனிதர்கள் உணவாக உட்கொள்ள அல்லாஹ் தடை
செய்திருக்கிறான் என்பதை ஒரு இஸ்லாமியன் தெரிந்து
கொள்ள - நபிகளாரின் பொன்மொழி ஒன்றே போதுமானதாகும்.


3. மாமிசம் உண்ணும் பிராணிகளை மனிதர்கள் உணவாக
உட்கொள்ளத் தடை பற்றி நபி (ஸல்) அவர்கள் அறிவித்த
செய்தி:


முஹம்மது நபி (ஸல்) அவர்கள் அறிவித்ததாக இப்னு அப்பாஸ்
(ரலி) அவர்கள் அறிவிக்கும் மேற்படி செய்தி ஸஹீஹுல்
புஹாரி - ஸஹீஹுல் முஸ்லிம் (ஹதீஸ் எண் 4752) ஸுனன்
இப்னு மாஜா (ஹதீஸ் எண் - 3232 முதல் 3234 வரை) போன்ற
ஹதீஸ் (செய்தி) நூல்களில் இடம்பெற்றுள்ளன.


அ. மாமிசம் உண்ணக்கூடிய கூரிய பற்களையும் நகங்களையும்
உடைய காட்டு விலங்குகளான - சிங்கம் புலி நாய் ஓநாய்
போன்றவைகள்.

ஆ. கொறித்துத் திண்ணக்கூடிய பற்களை உடைய எலி
பெருச்சாலி அணில் போன்றவைகள்

இ. ஊர்ந்து திரியக் கூடிய பாம்பு முதலை போன்ற
பிராணிகள்


ஈ. கூரிய அலகுகளையும் - கால் நகங்களையும் உடைய கழுகு
பருந்து காகம் ஆந்தை போன்ற பறவைகள் ஆகியவை மனிதர்கள்
உணவாக உட்கொள்ள தடை செய்யப்பட்ட பிராணிகள் மற்றும்
பறவைகள் ஆகும்.



நன்றி : ஒற்றுமை

முஸ்லிம்
முஸ்லிம்
FOUNDER

நான் உங்கள் : சகோதரன்
பதிவுகள் பதிவுகள் : 2030
ஸ்கோர் ஸ்கோர் : 10928
Points Points : 42
வயது வயது : 35
எனது தற்போதய மனநிலை : Fine

http://123muslim.com/

Back to top Go down

Back to top

- Similar topics
» உலகில் மூன்றில் ஒரு பங்கு உணவு குப்பையில் : ஐ.நா. உணவு நிறுவனம்
» பிரிட்டிஷ் எம்.பிக்களுக்கு ஹலால் உணவு கிடையாது
» உணவு கிடங்குகளில் வீணாகும் தானியங்கள் – அமைச்சர் தகவல்
» ஒவ்வொரு இரவும் 100 கோடி பேர் உணவு கிடைக்காமல் பசியுடன் தூக்கம்
» நியூயார்க் மேயரின் காலை உணவு விருந்து அழைப்பை புறக்கணித்த முஸ்லிம் தலைவர்கள்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum