வாருங்கள் (கஅபா அழைக்கிறது)
2 posters
Page 1 of 1
வாருங்கள் (கஅபா அழைக்கிறது)
தோற்றுப் போனவர்களே !
வெற்றிபெற வாருங்கள் !
ஆற்றுப் படுத்துதற்கு
அழைக்கின்றேன் வாருங்கள் !
கண்ணீரில் ஆன்மாவைக்
கழுவிச் சலவை செய்யப்
பாவதாரிகளே! என்
படித்துறைக்கு வாருங்கள் !
மோகத்தில் மூச்சிறைக்க
முத்தமிட்டுக் கருத்துவிட்ட
சுண்டுகளின் அர்த்தத்தை
கண்டுகொள்ள வாருங்கள் !
என்-
முந்தானையில் நான்
முடிந்துவைத் திருக்கின்ற
கருப்பமுதக் கல்சுவைக்க
கருத்துடனே வாருங்கள் !
“குமரு கரை ஏறட்டும்
கொண்டகடன் தீரட்டும்”
என்றநிலை மறந்துவிட்டு
என்னிடத்தில் வாருங்கள் !
ஆயுளுக்கும் சிரமங்கள்
ஆழியலைக் கைபோல
அலைகழிக்கும்; மறந்துவிட்டு
ஆசையுடன் வாருங்கள் !
மையித்து உடையணிந்து
மறுமைக்கு நடைபயின்று
பொய் அற்றுப் போவதற்கு
புறப்பட்டு வாருங்கள் !
நாடுமொழி மறந்து இறை
நாடுகின்ற மனமோடு
பாடுகின்ற “தல்பியாப்”
பண்ணிசைக்க வாருங்கள் !
எதிர்காலம் என்பதெல்லாம்
எவரிடத்தும் இல்லையதால்
புதிர்க் குமிழி உடையுமுன்னே
புறப்பட்டு வாருங்கள் !
ஆன்மாவின் புல்வெளியில்
அலைகின்ற மிருகத்தை
அறுத்துப் பலியிடுதற்கு
அழைக்கின்றேன் வாருங்கள் !
ஆன்மாவின் முகவரியை
அகிலத்தில் தொலைத்தோரே !
அடையாளம் கண்டுகொள்ள
ஆர்வமுடன் வாருங்கள் !
சாத்தானின் வலைவிரிப்பில்
“ஆமீன்கள்” துள்ளிவிழ
வெறுங்கையோ டிருப்போரே !
விரைந்திங்கே வாருங்கள் !
புவியீர்ப்பு மையம்
புதைந்திருக்கும் இடம்நோக்கி
புடம் போட நினைப்போரே !
புறப்பட்டு வாருங்கள் !
திசைகள் சங்கமிக்கும்
திருத்தலத்தை நோக்கியினி
திருந்திட நினைப்போரே !
திரளாக வாருங்கள் !
தொழுதறியேன் ! நடைமுறையின்
பழுதறியேன் என்னாமல்
முழுமனது வைத்தென்னை
முத்தமிட வாருங்கள் !
காணிக்கைத் தொழுகைஎன்
கண்முன்னே தொழுதுவிட்டால்
பேணிக்கை வந்துவிடும்
பிரியமுடன் வாருங்கள் !
நோயரக்கன் கைகளிலே
நொம்பலப் பட்டுடல்
மரணிக்கும் முன்னே
மரணிக்க வாருங்கள் !
மக்கத்து இறை இல்லம்
மனம் வைத்து அழைக்கின்றேன் !
சொர்க்கத்தை உங்களுக்கு
சொந்தமாக்க வாருங்கள் !
நன்றி: கமால் கடையநல்லூர்.
இந்தக்கவிதை மிகவும் மன ஆறுதலையும் பேணுதலையும் ஏற்ப்படுத்துகிறது வாசிக்கையில்...
வெற்றிபெற வாருங்கள் !
ஆற்றுப் படுத்துதற்கு
அழைக்கின்றேன் வாருங்கள் !
கண்ணீரில் ஆன்மாவைக்
கழுவிச் சலவை செய்யப்
பாவதாரிகளே! என்
படித்துறைக்கு வாருங்கள் !
மோகத்தில் மூச்சிறைக்க
முத்தமிட்டுக் கருத்துவிட்ட
சுண்டுகளின் அர்த்தத்தை
கண்டுகொள்ள வாருங்கள் !
என்-
முந்தானையில் நான்
முடிந்துவைத் திருக்கின்ற
கருப்பமுதக் கல்சுவைக்க
கருத்துடனே வாருங்கள் !
“குமரு கரை ஏறட்டும்
கொண்டகடன் தீரட்டும்”
என்றநிலை மறந்துவிட்டு
என்னிடத்தில் வாருங்கள் !
ஆயுளுக்கும் சிரமங்கள்
ஆழியலைக் கைபோல
அலைகழிக்கும்; மறந்துவிட்டு
ஆசையுடன் வாருங்கள் !
மையித்து உடையணிந்து
மறுமைக்கு நடைபயின்று
பொய் அற்றுப் போவதற்கு
புறப்பட்டு வாருங்கள் !
நாடுமொழி மறந்து இறை
நாடுகின்ற மனமோடு
பாடுகின்ற “தல்பியாப்”
பண்ணிசைக்க வாருங்கள் !
எதிர்காலம் என்பதெல்லாம்
எவரிடத்தும் இல்லையதால்
புதிர்க் குமிழி உடையுமுன்னே
புறப்பட்டு வாருங்கள் !
ஆன்மாவின் புல்வெளியில்
அலைகின்ற மிருகத்தை
அறுத்துப் பலியிடுதற்கு
அழைக்கின்றேன் வாருங்கள் !
ஆன்மாவின் முகவரியை
அகிலத்தில் தொலைத்தோரே !
அடையாளம் கண்டுகொள்ள
ஆர்வமுடன் வாருங்கள் !
சாத்தானின் வலைவிரிப்பில்
“ஆமீன்கள்” துள்ளிவிழ
வெறுங்கையோ டிருப்போரே !
விரைந்திங்கே வாருங்கள் !
புவியீர்ப்பு மையம்
புதைந்திருக்கும் இடம்நோக்கி
புடம் போட நினைப்போரே !
புறப்பட்டு வாருங்கள் !
திசைகள் சங்கமிக்கும்
திருத்தலத்தை நோக்கியினி
திருந்திட நினைப்போரே !
திரளாக வாருங்கள் !
தொழுதறியேன் ! நடைமுறையின்
பழுதறியேன் என்னாமல்
முழுமனது வைத்தென்னை
முத்தமிட வாருங்கள் !
காணிக்கைத் தொழுகைஎன்
கண்முன்னே தொழுதுவிட்டால்
பேணிக்கை வந்துவிடும்
பிரியமுடன் வாருங்கள் !
நோயரக்கன் கைகளிலே
நொம்பலப் பட்டுடல்
மரணிக்கும் முன்னே
மரணிக்க வாருங்கள் !
மக்கத்து இறை இல்லம்
மனம் வைத்து அழைக்கின்றேன் !
சொர்க்கத்தை உங்களுக்கு
சொந்தமாக்க வாருங்கள் !
நன்றி: கமால் கடையநல்லூர்.
இந்தக்கவிதை மிகவும் மன ஆறுதலையும் பேணுதலையும் ஏற்ப்படுத்துகிறது வாசிக்கையில்...
afsan- New Member
- நான் உங்கள் :
பதிவுகள் : 7
ஸ்கோர் : 4742
Points : 9
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum