தாருல் அர்கம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

அமைதிப் பேரணியினர்மீது தாக்குதல்: ஆறு பேர் படுகொலை

Go down

அமைதிப் பேரணியினர்மீது தாக்குதல்: ஆறு பேர் படுகொலை  Empty அமைதிப் பேரணியினர்மீது தாக்குதல்: ஆறு பேர் படுகொலை

Post by முஸ்லிம் Mon Jun 06, 2011 2:33 pm

ஆக்கிரமிக்கப்பட்ட சிரிய-கோலான் குன்றுப் பிரதேசத்தில் இன்று (05.06.2011) பலஸ்தீன் அகதிகளின் நலன்களுக்கான அமைதிப் பேரணியில் கலந்துகொண்ட பொதுமக்கள் மீது இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படையினர் சரமாரியான துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டதோடு கையெறி குண்டுகளையும் வீசியதில் ஆறு பேர் கொல்லப்பட்டதோடு, 13 பேர் படுகாயமடைந்துள்ளனர்.



காயமடைந்தவர்களின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக சிரியாவின் உத்தியோகபூர்வ செய்திச் சேவை தெரிவித்துள்ளது.

1967 ஆம் ஆண்டு யுத்தத்தில் இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படையால் ஆக்கிரமிக்கப்பட்ட பலஸ்தீன மற்றும் அரபு நிலப்பகுதிகளை நோக்கிச் செல்ல முயன்ற பேரணியினர் மீது கையெறிகுண்டுகளை வீசியும் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டும் இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படையினர் கடும் தாக்குதல் நடாத்தியுள்ளனர்.

படுகொலை செய்யப்பட்டவர்களில் இருவரின் தலையிலும் மார்பிலும் குண்டுகள் துளைத்திருந்தன எனவும், படுகாயமடைந்துள்ளவர்களில் இருவருக்கு அறுவைசிகிச்சை மேற்கொள்ளப்பட்டதாகவும் சிரியா மருத்துவ வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.


இந்நேரம்
முஸ்லிம்
முஸ்லிம்
FOUNDER

நான் உங்கள் : சகோதரன்
பதிவுகள் பதிவுகள் : 2030
ஸ்கோர் ஸ்கோர் : 10938
Points Points : 42
வயது வயது : 35
எனது தற்போதய மனநிலை : Fine

http://123muslim.com/

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum